மிஸ்டர். டோப்பு டோமேஷ் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்து வந்தார்.

>> Wednesday, October 15, 2008

மிஸ்டர். டோப்பு டோமேஷ் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலித்து வந்தார்.
அவளும் டோப்பு டோமேஷ் மீது அன்பாகவே இருந்தாள். இருவரும் சேர்ந்து சுற்றாத இடம் இல்லை. போகாத தியேட்டர் இல்லை. சுமார் 5 ஆண்டுகள் இந்தத் தொடர்பு நீடித்தது. ஆனால் டோப்பு டோமேஷ் -ஐ காதலிக்கிறாளா என்பது கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது.
டோப்பு டோமேஷ் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவளை நேரடியாகவே கேட்டுவிடுவது என்று முடிவு செய்தார். ஆனாலும் முகத்துக்கு முகம் கேட்க தயங்கிய டோப்பு டோமேஷ், தொலைபேசியில் கேட்டுவிடுவது என்று திட்டமிட்டார். அதன்படி அவள் வீட்டுக்கு போன் செய்ய, அவளே எடுத்தாள்..
டோமேஷ் : ஹலோ.. அபித குஜாம்பிகைதானே..?
அபி : ஆமாம்.. அபிதான் பேசறேன்.. என்ன உன் குரல் நடுங்கறாப்பல தெரியுது..?
டோமேஷ் : ஹி..ஹி.. நான் உன்னை காதலிக்கிறேன்..
அபி : தெரியும்..
டோமேஷ் : நீ என்னைக் காதலிக்கிறாயா..?
அபி : அதில் என்ன சந்தேகம்..?
டோமேஷ் : கடவுளுக்கு நன்றி..! அப்போ நாம திருமணம் செய்துக்கலாமா..?
அபி : நிச்சயமா..!
டோமேஷ் : எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்லேன் ப்ளீஸ்..
அபி : முதல்ல உன் பேர் என்னன்னு சொல்லு.. நானும் அப்போலேருந்து கெஸ் பண்ணறேன்.. எவன்னே புரியல..!

Read more...

Back to TOP